வெளிபடுத்துதல்

அடக்கி வைத்தல் சுதந்திரத்தை நோக்கி அழைத்து செல்லாது. அடக்கி வைத்தல் வெளிபடுத்துதலை விட மோசமானது. ஏனெனில் வெளிப்படுத்துதல் மூலமாக என்றாவது ஒருநாள் அந்த நபர் விடுதலை பெறக்கூடும், ஆனால் அடக்கி வைத்தல் மூலமாக அவர் எப்போதும் அதன் பிடியில் இருப்பார். வாழ்வு மட்டுமே உனக்கு சுதந்திரத்தை தரும், வாழும் வாழ்க்கை உனக்கு விடுதலை தரும், வாழாத வாழ்க்கை ஈர்ப்பைத் தருவதாகத்தான் இருக்கும்.



ஒரு பாடல் பாடு, அது ஒரு லா..லா..லா.. என்பதாகக் கூட இருக்கலாம். அது உயிர்ப்போடு இருக்கும். அது சந்தோஷத்தின் வெளிப்பாடு.



அது தன்னுணர்வற்ற நிலை. அதனால்தான் அதை காதலில் விழுவது என்று நாம் சொல்கிறோம்.



உனது மௌனத்தில், ஆழ்ந்த மௌனத்தில் இருக்கும் கணத்தில் உனது வெளிபடுத்துலில் இரு.



ஒவ்வொரு கலைஞனும் வெளிபடுத்தலில் வேறுபட்ட வகைகளை முயற்சி செய்கிறான்.



மரங்களும் மனிதனும் வேறுபட்ட வெளிபடுதல்தான் ஆயினும் வாழ்வு என்பது ஒன்றுதான்.



அதீத சோகத்திலும், மிகப்பெரிய சந்தோஷத்திலும் கண்ணீர்தான் வெளிபடும்.

-ஓஷோ
 —

Unknown

Author & Editor

Hi,i am web developer and internet marketer.i love learning all things in the world.so,i share my leaned.

0 comments:

Post a Comment

Popular Posts