ஆசை

ஆசை மனிதனை அடிமைப்படுத்தி விடுகிறது. ஆசை வயப்பட்ட மனிதன் தன் இழி செயல்களைக் குறித்தும் அதன் விளைவுகளைக் குறித்தும் சிந்திப்பதேயில்லை. அறியாமை அவன் கண்களை மறைத்து விடுகிறது. இன்பம் என்று ஒன்று இருப்பதாக எண்ணி விளக்கில் விழும் விட்டில் பூச்சியைப் போத் துன்பத்தில் உழன்று சாகிறான். இவ்வளவு நீளமாக ஏன் சொல்கிறேன் என்றால், சாதனை என்பது இதுவல்ல. இவ்வளவு துன்பங்களுக்கும் காரணமான ஆசைகளை வெல்வதே சாதனை. அதை விடச் சிறந்த சாதனை வேறெதுவும் இருக்க முடியுமா என்ன ? ஆசைகளுடன் போராடி அதை வென்று விட்டால் மனமானது அமைதி பெறும். அதுவே ஆன்மிக வாழ்விற்கான முதல் தகுதி. மன அமைதி மன அமைதி என்று நாம் அடிக்கடி பேசிக் கொள்கிறோம். ஆனால், அதை உணர்ந்த ஜீவன் ஒன்றாவது இன்று உலகத்தில் இருக்குமா ? என்றால் சந்தேகமே. வேண்டுமானால் இருப்பது போலக் காட்டிக் கொள்ளலாம். இருப்பதாக பாவனை செய்து கொள்ளலாம். ஏனென்றால் இங்கே எல்லாமே பாவனைதான். யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. என் மூன்று வயது குழந்தை ஒரு பொம்மையை மடியில் வைத்துக் கொண்டு அதற்கு சோறு ஊட்டுகிறது, தாலாட்டுகிறது, விசிறி விடுகிறது. உண்மையிலேயே அந்த பொம்மை இதையெல்லாம் அனுபவிப்பதாக ஒரு அழுத்தமான எண்ணம் அவளுக்குள் இருக்கிறது. நமக்கு அது குழந்தைத்தனம். அவளுக்கு அது நிஜம். இதையே கோவில்களில் பூசாரியும் பாவனையாகச் செய்கிறார். அதை நாமும் நம்புவது போல பாவனை செய்து கொள்கிறோம்.

Unknown

Author & Editor

Hi,i am web developer and internet marketer.i love learning all things in the world.so,i share my leaned.

0 comments:

Post a Comment

Popular Posts