கொண்டாட்டம்

மலர் பூச்சொரிந்து கொட்டுகிறது. அது தொடர்ந்து சொரிகிறது. அவை நிறுத்துவதேயில்லை.

இயற்கை இதுவரை நிகழ்ந்த புத்தர்களுக்கும் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் புத்தர்களுக்கும் இனி நிகழப் போகும் புத்தர்களுக்கும் சேர்த்து அளவற்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

இயற்கையை பொறுத்தவரை கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்றெல்லாம் கிடையாது. 

"இப்போது என்பது மட்டுமே முடிவற்றது, "

இப்போது மட்டுமே இருக்கிறது.

உண்மையான மௌனம் உன்னுள் நிகழ்ந்துள்ளது என்பதற்கான சான்றே கொண்டாட்டம்தான்.

நீ என்ன செய்தாலும் அதை அனுபவித்து, கொண்டாடி, அன்போடு செய்தாலே படைப்பதாகும்.

உன்னுடைய வாழ்க்கை ஒரு கொண்டாட்டமாக இருந்தால் இறப்பு அதன் உச்சகட்ட கொண்டாட்டமாக இருக்கும்.

நீ நிறைவடைந்ததை, அடைந்ததை நடனமாடி கொண்டாடுவதே கருணையாகும்.

இந்த இயற்கை முழுமையும் ஒரு கொண்டாட்டமே, அதன் பாகமாகி விடு.

--- ஓஷோ --

Unknown

Author & Editor

Hi,i am web developer and internet marketer.i love learning all things in the world.so,i share my leaned.

0 comments:

Post a Comment

Popular Posts